பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வசனத்தை பேச மறுத்தது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

 

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வசனத்தை பேச மறுத்தது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்தை பேச மறுத்ததற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சென்னை: பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்தை பேச மறுத்ததற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரஜினிக்கு, வில்லனாக ஜித்து என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசையமைத்திருக்கிறார்.

petta
  
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களிடம், தங்களுக்கு பிடித்த ரஜினிகாந்தின் வசனங்களை பேசும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி பாபி சிம்ஹா உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தின் வசனங்களைப் பேசி கைத்தட்டல் வாங்கினர். ஆனால் விஜய் சேதுபதி ரஜினிகாந்தின் வசனங்களை பேசாமல் என்னைத் தவிர யார் மாதிரியும் நடிக்கத் தெரியாது என்று கூறி விடைபெற்றார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

rajini

இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு விஜய்சேதுபதி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு வராத செயலை நான் எப்படிச் செய்யமுடியும். கூத்துப்பட்டறையில் நான் நடிப்பு கற்பதற்காகச் சென்ற போது ஒருவர் என்னை மிமிக்ரி செய்யுமாறு கூறினார். அங்கு வரும் பலரும் ரஜினிகாந்த் போல் நடித்துக் காட்டுவார்கள். ஆனால் அதுகூட எனக்கு வராது. சூப்பர் ஸ்டார் போல நடித்துக்கூடக் காட்ட முடியவில்லையே என்று கூட நான் நினைத்திருக்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.