பேட்டியில் கண் கலங்கிய சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா? 

 

பேட்டியில் கண் கலங்கிய சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா? 

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி பாலிவுட்டில் தற்போது முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்தில்  நடித்து வருகிறார். 

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி பாலிவுட்டில் தற்போது முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதில் சன்னி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை நடிகரும் உதவியாளருமான ஒருவருக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு போஸ்ட் பதிவு செய்து இருந்தார். அதை பற்றி சொல்லுமாறு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினர். 

sunny leone

அதற்கு அவர் கூறியதாவது, ‘ஷூட்டிங்கில் என்னுடைய உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகர். நான் அந்த போஸ்ட் பதிவிடும் சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்தது. 20 சதவிகிதம் மட்டுமே அவரது சிறுநீரகம் வேலை செய்து வந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. 

sunny leone

அவருடைய மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் நானும் என் கணவரும் பார்த்து கொண்டோம். நமது நண்பர் அல்லது நம்முடன் வேலைபார்க்கும் ஒருவர் சாகப்போகிறார் எனத் தெரிந்தால் உதவி செய்யாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். 

மேலும் எனக்கு உடம்பு சரில்லாத சமயத்தில் அவர் தான் நிறைய உதவி செய்தார். அதை நினைக்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது. அவரை நாங்கள் நிறையவே மிஸ் பன்றோம்’ என்று பேட்டியில் கண்ணீருடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மூன்று ஏடாகூடமான வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நடிகை கஸ்தூரி…