பேச மறுத்த காதலன்: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காதலி!

 

பேச மறுத்த காதலன்: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காதலி!

வேலூரில் காதலன் பேச மறுத்து போனை எடுக்காததால் விரக்தியடைந்த நர்சிங் மாணவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: காதலன் பேச மறுத்து போனை எடுக்காததால் விரக்தியடைந்த நர்சிங் மாணவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் பாகாயம் சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவரின் மகள் அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இதனிடையே இவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவர, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்னுடைய காதலனிடம் போனில் இது பற்றி கூறியுள்ளார். தொடர்ந்து  ‘தன்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கூறியுள்ளார்.  திருமணத்திற்கு மறுத்த காதலன், அதன்பிறகு போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும், காதலன் போனை எடுக்கவில்லை. இதையறிந்த பெற்றோர் மீண்டும் கண்டித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அப்பெண், நேற்று நள்ளிரவில் வீட்டில் உள்ள கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீ விபத்தின் போது மகளின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் அலறி எழுந்தனர். கழிவறை பகுதிக்கு ஓடி வந்து பார்த்தபோது, அந்தப் பெண் தீயில் முழுவதுமாக வெந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காதலன் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.