பேக்கரியில் திருடி காதலிக்கு தங்க செயின் வாங்கிய இளைஞர்: சிக்கியது எப்படி தெரியுமா?

 

பேக்கரியில் திருடி காதலிக்கு தங்க செயின் வாங்கிய இளைஞர்: சிக்கியது எப்படி தெரியுமா?

காதலிக்காக பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி: காதலிக்காக பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் குண்டுசாலை பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  கடந்த 4 ஆம் தேதி  முன்பு உறவினர் வீட்டு  சுபநிகழ்ச்சிக்குச் சென்ற பெருமாள் நேற்று கடையைத் திறந்துள்ளார். அப்போது பேக்கரியின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

theft

இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணையில், கடையிலிருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க காசுகள் திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிசிடிவி கேமிராவின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது.

crime

இதனால் முதற்கட்ட விசாரணையை அப்பகுதியிலிருந்து தொடங்கிய போலீசாருக்கு பேக்கரிக்கு எதிரே பழக்கடை நடத்தி வந்த மதியழகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. மதியழகன் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான  பைக் வாங்கியதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்  என்று கூறப்படுகிறது.  இதனால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பேக்கரியில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். 

crime

அதில், தனது காதலியை சந்தோஷப்படுத்துவதற்காக  பேக்கரியில் பணத்தை  திருடியதாகவும், திருடிய பணத்தை வைத்து புதிய பைக் மற்றும் காதலிக்கு தங்க செயின்களை வாங்கி தந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மதியழகன் வாங்கிய பைக் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மதியழகனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.