பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் திடீர் ராஜினாமா

 

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் திடீர் ராஜினாமா

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

புருசெல்ஸ்: பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி கட்சியான பெல்மிஸ்ட் தேசிய கட்சி திடீரென வாபஸ் பெற்றது.

இதனால் பிரதமர் சார்லஸ் மைக்கேலின் அரசு மைனாரிட்டி அரசாக மாறியது. எனவே அவர் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேசமயம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.

ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் மைக்கேல், ராஜினாமா செய்வதாக அறிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை பெல்ஜியம் மன்னர் பிலிப்பிடம் அவர் ஒப்படைத்தார்.

பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற தேர்தல், வருகிற மே மாதம் நடைபெறவுள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை சார்லஸ் மைக்கேல் பதவியில் இருக்குமாறு மன்னர் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு பத்திரிகைகள் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெல்ஜியம் பிரதமரின் இந்த திடீர் ராஜினாமாவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.