பெற்ற மகளை 3 ஆண்டுகளாக வன்கொடுமை செய்த தந்தை! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி. இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

 

பெற்ற மகளை 3 ஆண்டுகளாக வன்கொடுமை செய்த தந்தை! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி. இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!

தஞ்சை மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுக்கூர் அடுத்த பழவரிகாடு சேர்ந்தவர் குமார்(37).  கூலி தொழிலாளியான இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் தனது 10 வயது மகளை 2016 ஆம் ஆண்டு முதல் வீட்டிலேயே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பள்ளிக்குச் சென்ற சிறுமி, மயங்கி விழவே ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமியின் தந்தையே வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து குமாரை கைது செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், அவரை சிறையில் அடைத்தார். 

rape

பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மயங்கி விழுந்தது எடுத்து பரிசோதனை செய்ததில் அந்த சிறுமிக்கு எச்ஐவி நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிறையில் உள்ள தந்தையை சோதனை செய்ததில் அவருக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து குமாருக்கு  நான்கு ஆயுள் தண்டனை 4500 ரூபாய் அபராதம் விதித்து தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவியும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசிடம் பரிந்துரை செய்தது.