பெற்ற மகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த தந்தை!

 

பெற்ற மகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த தந்தை!

தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட மகனை பெற்ற தந்தையே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட மகனை பெற்ற தந்தையே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஆறுமுகனார் தெருவை சேர்நதவர் உதயகுமார் (61) இவரது மகன் மணிகண்டன்(24) அப்பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மணிகண்டன் தினமும் இரவு குடித்து விட்டு தந்தையுடன் ரகளையில் ஈடுபட்டு வந்த்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் வழக்கம் போல் தந்தை உதயகுமாருடன் தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உதயக்குமார் தனது மகன் என்று கூட பாராமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலிசார் உதயகுமாரை கைது செய்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.