பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை! 

 

பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை! 

பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டின் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டின் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை புளியந்தோப்பில் வசித்து வரும் 10 வயது சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளரான 40 வயது மதிப்பு மிக்க பெருமாள் கடந்த 2 மாதங்களாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Child Abuse

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குபதிவு செய்து பெருமாளை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியின் பெற்றோர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமிக்கு, பெருமாள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யபட்டது. அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனா்