பெரு முதலாளிக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல..! கொதிக்கும் கமல்.!?

 

பெரு முதலாளிக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல..! கொதிக்கும் கமல்.!?

 இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ள  சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை  சாடி மிகவும் கடுமையாக பகிர்ந்துள்ளார். 

 

அதில் அவர், உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. 

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என்று கூறியுள்ளார்.