பெருவில் நிகழ்ந்த தீவிபத்தில் 200 வீடுகள் நாசம்!

 

பெருவில் நிகழ்ந்த தீவிபத்தில் 200 வீடுகள் நாசம்!

வீடுகள் இருந்த இடத்தில் செயல்பட்டுவந்த பட்டாசு குடோனில் தீபற்றி வேகமாக பிற பகுதிகளுக்கு பரவியதால். தொடர்ந்து, நிறைய தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதால், தீ ஒருவழியாக கட்டுக்குள் வந்தது.

பெரு நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான கலாவோ நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. முதலில் களத்திற்கு வந்திறங்கிய ஆறு தீயணைப்பு வாகனங்களால் தீயை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. காரணம், வீடுகள் இருந்த இடத்தில் செயல்பட்டுவந்த பட்டாசு குடோனில் தீபற்றி வேகமாக பிற பகுதிகளுக்கு பரவியதால். தொடர்ந்து, நிறைய தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதால், தீ ஒருவழியாக கட்டுக்குள் வந்தது.

Peru Fire Accident

இவ்வளவு பெரிய தீ விபத்து நடந்தும் யாரும் தீக்கிரையாகவில்லை என்பது நல்ல செய்தி. ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில வீடுகள் செங்கற்கள் மற்றும் சிமென்ட் மூலம் கட்டப்பட்டவையாக இருந்தாலும், பெரும்பாலான வீடுகள் ப்ளைவுட்களால் கட்டப்பட்டதாக இருந்ததால், தீ வெகுவேகமாக பரவியது.