பெரும் புள்ளிகளின் முகத்திரையை கிழிக்கும் மிடூ ஹேஸ்டேக்கிற்கு ராகுல் காந்தி ஆதரவு

 

பெரும் புள்ளிகளின் முகத்திரையை கிழிக்கும் மிடூ ஹேஸ்டேக்கிற்கு ராகுல் காந்தி ஆதரவு

பிரபலங்களின் முகத்திரையை கிழிக்கும் மிடூ ஹேஸ்டேக் இயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

டெல்லி: பிரபலங்களின் முகத்திரையை கிழிக்கும் மிடூ ஹேஸ்டேக் இயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு தனிமையில் நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் தொடங்கி தமிழ் திரையுலகம் வரை புயலை வீசி வரும் அந்த ஹேஸ்டேக்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இதை ஏற்காதவர்களுக்கான இடைவெளி குறுகி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மைகளை தெளிவாகவும், சத்தமாகவும் கூறுவதன் மூலம் தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும்” என மி டூ ஹேஸ்டேக்கிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.