பெருமாள் கோவில் துளசி இலைகளில் இத்தனை சக்தி உள்ளதா? இதய நோய்களைப் போக்கும் துளசி

 

பெருமாள் கோவில் துளசி இலைகளில் இத்தனை சக்தி உள்ளதா? இதய நோய்களைப் போக்கும் துளசி

இன்றிலிருந்து துளசியை அதன் மகத்துவம் தெரிந்து பயன்படுத்த துவங்குங்க.அப்படியே தீர்த்தம் குடிச்சு முடிச்சதும், துளசியையும் கேட்டு வாங்கிக்கோங்க

இன்று சனிக்கிழமை… மறக்காம அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போங்க… அப்படியே தீர்த்தம் குடிச்சு முடிச்சதும், துளசியையும் கேட்டு வாங்கிக்கோங்க… இன்றிலிருந்து துளசியை அதன் மகத்துவம் தெரிந்து பயன்படுத்த துவங்குங்க. சாதாரணமா வீட்டில் செடி வளர்க்க ஆசைப்படும் போது, பூத்துக் குலுங்குகிற ரோஜா செடிகளுக்குத் தான் நாம முக்கியத்துவம் தர்றோம். ஆனா மாடி வீடாக இருந்தாலும், செடி வளர்ப்பவர்களின் முதல் சாய்ஸ் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, கற்றாழை இவை போன்றவையாக தான் இருக்க வேண்டும். இந்த செடிகள் எல்லாம் கிருமி நாசினியும் கூட!
துளசி இலைகள் ஜீரணக் கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல், சம்பந்தமான நோய்கள், காதுவலி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்யும் சக்தி துளசிக்கு உண்டு. அதனால் தான் துளசியை மூலிகைகளின் ராணி என்றழைக்கிறார்கள். துளசியின் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள். அதிலும் துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

tulsi

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயைக் கொப்பளித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும்.  உடலில் வெப்பம் அதிகமாக இருந்தால், தலைவலி வரக்கூடும். அப்படி வரும் தலைவலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடியைச் சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். இதெல்லாமே உடல் சூட்டினால் வருவது தான். 

tulsi

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.  தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.  இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள்.

tulsi

இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும். நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும். மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். துளசியில் இருக்கும் அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. தினமும் ஆன்மிகத்தோடு ஆரோக்கியத்தை வளர்க்க வீட்டில் நிச்சயம் துளசி செடியையும் வளர்த்து வாருங்கள்.