பெருகும் பெருசுகளின் பலாத்காரம்-எட்டாவது படிக்கும் சிறுமியை கெடுத்த 70 வயசு பெருசு -ஆயுள் தண்டனையால் அழுகை ….
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையின மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 70 வயதுடைய ஒரு நபருக்கும் 40 வயதுடைய கூட்டாளிக்கும் ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையின மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 70 வயதுடைய ஒரு நபருக்கும் 40 வயதுடைய கூட்டாளிக்கும் ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோட்டா மாவட்டத்தில் தியோலி மஞ்சி கிராமத்தில் வசிக்கும் பாபுலால் மாலி (70) மற்றும் அவரது கூட்டாளி மோஹித் மாலி (40) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நரேந்திர குமார் சர்மா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்தது.
இருவர் மீதும் ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி புகார் அளித்திருந்தார், அதில் ஒரு வெள்ளரிக்காயை கொடுப்பதாக பொய் சொல்லி பாபுலால் மாலி தன்னை கிராமத்தில் உள்ள கிணற்றடிக்கு அழைத்துச் சென்று குற்றம் செய்ததாக அரசு வக்கீல் தெரிவித்தார்.