பெருகும் குடும்ப சண்டையால் கருகும் குழந்தைகள் -ஆறு வயது மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை ..

 

பெருகும் குடும்ப சண்டையால் கருகும் குழந்தைகள் -ஆறு வயது மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை ..

இறந்த இருவரின் சடலங்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.பிப்ரவரி 16 ஆம் தேதி கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்த,உணவக உரிமையாளர் 52 வயதான  கோபால்கிருஷ்ணா ராய்,தனது ஆறு வயது மகன் அனீஷுடன் தனது காரில் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு உணவக உரிமையாளர் பதினைந்து நாட்களுக்கு முன்பு தனது 6 வயது மகனுடன் நேத்ராவதி பாலத்திலிருந்து குதித்து உயிரிழந்தார்.இறந்த இருவரின் சடலங்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

Netravati river

பிப்ரவரி 16 ஆம் தேதி கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்த,உணவக உரிமையாளர் 52 வயதான  கோபால்கிருஷ்ணா ராய்,தனது ஆறு வயது மகன் அனீஷுடன் தனது காரில் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை அங்கேயே விட்டு விட்டு,பாதியிலேயே கிளம்பி ,தனது காரை நேத்ராவதி பாலத்தில் நிறுத்திவிட்டு,மகனுடன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.வெள்ளிக்கிழமை  இருவரின் உடல்களும்  மாத்து கடற்கரையின் கரையில் மீட்கப்பட்டு  அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதற்குப்பிறகு  ராயின் காரில் வைத்திருந்த தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த குறிப்பில், லீனா உணவகம் மற்றும் பார் உரிமையாளர் தனது மகனுடன் நேத்ராவதி பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்க போவதாக மட்டும்  குறிப்பிட்டிருந்தார்.