பெரிய வீட்டு ‘சின்னப்பிள்ளை விவகாரம்’! ஆண்ட்ரியாவுக்கு கைக்கொடுத்த விஜய்!

 

பெரிய வீட்டு ‘சின்னப்பிள்ளை விவகாரம்’! ஆண்ட்ரியாவுக்கு கைக்கொடுத்த விஜய்!

தமிழகம் முழுவதுமே ‘பிகில்’ தீபாவளி கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், ‘தளபதி64’ என அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். டெல்லியில் நடந்து வரும் படப்பிடிப்பு முடிவுறும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மொத்த குழுவும் ஆந்திராவிற்கு செல்ல இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் விஜய்யின் இந்த படம், தமிழ் புத்தாண்டு ரிலீஸாக வெளிவர உள்ளது. இதுவரைக்கும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். கூடுதல் தகவல், இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு வெயிட்டான ரோல் என்பதும், அந்த கேரெக்டருக்கு ஆண்ட்ரியா பெயரைச் சொல்லி டிக் அடித்தது விஜய் தான் என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் யூனிட் ஆட்கள்!

தன் சுயசரிதை புத்தகத்தைப் பற்றி மனம் திறந்து ஆங்கில நாளேடுகளுக்கு பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா, தான் ஒரு அரசியல் பின்புலம் உள்ள நடிகரின் பிடியில் சிக்கியிருந்ததாகவும், திருமணமான அவருடனான உறவுக்குப் பின்னர் தன் வாழ்க்கை மிகவும் துன்பத்திற்குள்ளானதாகவும், அதனால் அதிகளவில் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடந்த 2,3 வருடங்களாக தன்னால் திரையுலகில் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும் தெரிவித்திருந்தார். இது பற்றி தன்னுடைய சுயசரிதையில் விரிவாக எழுதியிருப்பதாகவும், அந்த அரசியல் குடும்ப நடிகர் யார் என்கிற விவரங்களையும் புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டிருப்பதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்திருந்தார்.

vijay
ஆண்ட்ரியாவின் இந்த பேட்டி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகில் அரசியல் பின்புலமுள்ள, திருமணமான நடிகர்களை(!) கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்பதையெல்லாம் யூகித்தே ஆண்ட்ரியா பகீரங்கமாக இப்படி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது இன்னொரு மீ டூ புகார் மாதிரி தான் என்று அப்போது பரவலாக பேசினார்கள். அதன் பிறகு, தன் புத்தக வெளியீட்டு தேதியை எல்லாம் தெரிவித்த ஆண்ட்ரியா, புத்தகம் வெளியிடும் முன்பாகவே அந்த நடிகரின் பெயரைத் தெரிவிக்கப் போகிறேன். அந்தளவிற்கு அவரால் நான் வேதனைகளை அனுபவித்திருக்கிறேன் என்று நடிகரின் பெயரை அறிவிப்பதற்கு நாள் எல்லாம் குறித்துக் கொடுத்தார். 
நடிகை ஆண்ட்ரியாவின் புகார் படி அந்த நடிகர் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதற்கு வம்பு என்று அதன் பிறகு அரசியல் பாணியிலேயே பெட்டிகள் கைமாறியதா அல்லது ஆண்ட்ரியா மிரட்டப்பட்டாரா என்று தெரியவில்லை. அந்த அறிவிப்போடு தன்னுடைய புலம்பல் புகாருக்கும், சுயசரிதை புத்தகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஆண்ட்ரியா.

actress andrea
இதன் பிறகு தான் அதிரடியாய் கைக்கொடுத்திருக்கிறார் தளபதி விஜய். இந்த புகாருக்குப் பின்னால், ஆண்ட்ரியாவிற்கு சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் எதுவும் கைக்கூடவில்லை. நடித்து முடித்த ஒன்றிரண்டு படங்களும் ரிலீஸுக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசியல் குடும்பத்தின் எதிர்ப்பைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல், ஆண்ட்ரியாவின் பெயரை சந்தோஷமாக சொல்லி டிக் அடித்திருக்கிறார் தளபதி விஜய். நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளாமல், கஷ்டப்படுறவங்களைக் கைத்தூக்கி விடுகிற பழக்கம் உள்ளவரை விஜய் ரசிகர்களின் மனசில் எப்போதுமே ரியல் தளபதி தான்!