பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் மரியாதை!
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகள் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதேபோல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.
ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை!
அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க #periyar! pic.twitter.com/Mdq3HIJoKB
— M.K.Stalin (@mkstalin) December 24, 2019
இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ஈரோட்டுப் பூகம்பம் என இத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை! அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க பெரியார் ! என்று பதிவிட்டுள்ளார்.