பெத்த மகள் பலாத்காரம் -தந்தைக்கு 25 ஆண்டு  சிறைத்தண்டனை…காரைக்கால் கோர்ட் அதிரடி தீர்ப்பு ..  

 

பெத்த மகள் பலாத்காரம் -தந்தைக்கு 25 ஆண்டு  சிறைத்தண்டனை…காரைக்கால் கோர்ட் அதிரடி தீர்ப்பு ..  

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 41 வயது நபர் ,தனியாக இருந்த ஒன்பது வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவரது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் தினமும் மாலையில்தான் வருவார். அப்போது அவர் இப்படி மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

புதுச்சேரி காரைக்காலில் பெற்ற மகளை வன்கொடுமை செய்த நபருக்கு 25 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழங்கி காரைக்கால் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 41 வயது நபர் ,தனியாக இருந்த ஒன்பது வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவரது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் தினமும் மாலையில்தான் வருவார். அப்போது அவர் இப்படி மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

court

சம்பவத்தன்று மாலையில் வீடு திரும்பிய அந்த சிறுமியின் தாயார் சிறுமி வலியால் அழுது கொண்டிருப்பதை கண்டார். அப்போது அவர் சிறுமியிடம் எதனால் அழுகிறாய் என்று கேட்டபோது சிறுமி தந்தை மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி கூறினார். அதனை கேட்டு அதிர்ச்சியுற்ற தாய் சிறுமியை சோதனை செய்தபோது சிறுமியின் தனிப்பட்ட பகுதியில் ரத்தக் காயத்தோடிருப்பதை கண்டு போலீசில் புகார் தந்தார்.
போலீசார் அந்த சிறுமியின் தந்தை மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் வன்கொடுமை உறுதியானதும் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கார்த்திகேயன் வாசித்தார். அதில் குற்றவாளியான அந்த நபருக்கு 25 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.