பெண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கூண்டோடு கைது!

 

பெண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கூண்டோடு கைது!

ஆந்திராவில் பெண் வேடமிட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையடித்துவந்த திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஆந்திராவில் பெண் வேடமிட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையடித்துவந்த திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தவாரம் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளார். கார் நெடுஞ்சாலையோரம் சென்றுகொண்டிருந்தபோது, பெண் வேடமிட்ட நபர் ஒருவர் உதவி கேட்பது போல் காரை நிறுத்தியுள்ளார். உடனே மகேஷ் காரை நிறுத்தியதுடன், அருகில் மறைந்திருந்த மேலும் மூன்று பேர் வந்து மகேஷை தாக்கி அவரிடமிருந்த பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர். உடனடியாக மகேஷ் அருகிலிருந்த ரேணிகுண்டா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். 

thief

இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட ரேணி குண்டா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமான ஸ்ரீராம், வெங்கடாத்ரி, வெங்கட்ரமணா, சரத்குமார் ஆகிய நான்கு பேரை சுற்றி திருந்தனர். அவர்களிடமிருந்து சான்றிதழ், செல்போன் மற்றும் ரூபாய் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.