பெண் விட்ட சாபத்தால் தான் நண்பர் இறந்துவிட்டார்: இளைஞர்கள் செய்த காரியம் இதுதான்!

 

பெண் விட்ட சாபத்தால் தான் நண்பர் இறந்துவிட்டார்: இளைஞர்கள் செய்த காரியம் இதுதான்!

நண்பர் இறந்ததற்கு எதிர்வீட்டுப்  பெண் கொடுத்த சாபம் தான் காரணம் என்று அவரது வீட்டை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : நண்பர் இறந்ததற்கு எதிர்வீட்டுப்  பெண் கொடுத்த சாபம் தான் காரணம் என்று அவரது வீட்டை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்  ராணி.  இவர் தனது வீட்டு  வாசலில் டிபன் கடை ஒன்றை நடத்தியுள்ளார். இதை அப்பகுதியில் வசித்த  இளையகணேசன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் ராணிக்கும்  இளையகணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவர்கள் காவல் நிலையம் வரை அடிக்கடி சென்று பஞ்சாயத்து செய்துள்ளனர்.இதனால் ராணி டிபன் கடை நடத்த முடியாமல் போயுள்ளது. இதனால் அவர் இளையகணேசன் குடும்பத்தை  அழிந்து போகட்டும் என்று சாபம் கொடுத்துள்ளார். 

arrested

இந்நிலையில் இளையகணேசனின் மகன் சதீஷ் திடீரென்று உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். இதற்குக் காரணம்  ராணி கொடுத்த சாபம் தான் என்று நினைத்த சதீஷின் நண்பர்கள்  ராணியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.  இதுகுறித்து ராணி அளித்த புகாரின் அடிப்படையில், டேவிட் என்ற ராஜா, ஜவகர் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 10நபர்களைத் தேடி வருவது  குறிப்பிடத்தக்கது.