‘பெண் மருத்துவரை மட்டுமல்ல ஏற்கனவே 9 பெண்களை நாசம் செய்து எரித்து கொன்றோம்’ : கடைசி நேரத்தில் அளித்த பகீர் வாக்குமூலம்!

 

‘பெண் மருத்துவரை மட்டுமல்ல ஏற்கனவே 9 பெண்களை நாசம் செய்து எரித்து கொன்றோம்’ : கடைசி நேரத்தில் அளித்த பகீர் வாக்குமூலம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டுக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

ttn

இதைத்தொடர்ந்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பின்னணி குறித்து  உயர்மட்ட காவல்துறை குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் தெலுங்கானா – கர்நாடகா எல்லைப் பகுதியில்  அவர்களுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இப்பகுதியில் இதே போல் 15 பேரை எரித்து கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

ttn

இந்நிலையில்  என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில்  முகமது பாஷா ஆரீஃப், சென்னகேசவலு இருவரும் இறப்பதற்கு முன் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளனர். அதாவது, ஏற்கனவே இதுபோல் பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றுள்ளோம் என்று தெரிவித்தாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.  இந்த  தகவலானது  பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.