பெண் பூக்களை பூத்துக்குலுங்க விடுங்கள்… நசுக்காதீர்கள் – தமிழிசை

 

பெண் பூக்களை பூத்துக்குலுங்க விடுங்கள்… நசுக்காதீர்கள் – தமிழிசை

தயவு செய்து பெண் பூக்களை பூத்துக்குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள்… அதனை நசுக்கி விடாதிர்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என கூறிவிட்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, ஒரு ஆண் பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என கற்றுதந்து ஆண்களை வளர்க்க வேண்டும். புன்னைகையுடன் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புகிறாள் என்றால் அது நடக்காத விஷயமாக இருக்கிறது. பெண்களுக்கு தற்காப்புக்கலை கற்று தர வேண்டும்.

Tamilisai

கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தயவு செய்து பெண் பூக்களை பூத்துக் குலுங்க விடுங்கள். மொட்டுகளை கனிய விடுங்கள். அதனை நசுக்கி விடாதீர்கள்” எனக் கூறினார்.