பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!

 

பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!

லேன்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் இணை இயக்குராக இருந்த ரீட்டா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லேன்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் இணை இயக்குராக இருந்த ரீட்டா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டொயோட்டா நிறுவனத்தின் இணை இயக்குனரான ரீட்டாவிற்கு வயது 50. அவரது கணவர் டொயோட்டோ ஷோ ரூமுக்கு நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சடலம் தூக்கில் தொங்கி கொண்டிருந்த நிலையில் கண்ட சூப்பர்வைசர் ஏசுபாசம் அலறியடித்து நுங்கம்பாக்கம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். 

விரைந்து வந்த காவல் துறை அவர் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. குடும்பத்தின் பிரச்சனையா அல்லது தொழிலில் ஏதாவது சிக்கலை சந்தித்து இருப்பாரா என்ற கண்ணோட்டத்தில் போலீசார் ரீட்டாவின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.