பெண் குழந்தை இறந்ததால் செல்லும் வழியிலேயே புதைத்த பெற்றோர்.. மீண்டும் பெண் சிசுக்கொலையா? விசாரணை தீவிரம்!

 

பெண் குழந்தை இறந்ததால் செல்லும் வழியிலேயே புதைத்த பெற்றோர்.. மீண்டும் பெண் சிசுக்கொலையா? விசாரணை தீவிரம்!

இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள  போத்தராவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவசிங்கப்பெருமாள் – சங்கீதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் அந்த குழந்தையைக் கொன்று விட்டதாகக் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் ரகசியமாகத் தகவல் கொடுத்துள்ளனர்.

 

ttn

உடனே அந்த கிராம அலுவலர் தோகை மலை காவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் படி போலீசார் சிவசிங்கப்பெருமாள் – சங்கீதா தம்பதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், குழந்தை உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் குழந்தை இறந்து விட்டதால் செல்லும் வழியிலேயே புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு சந்தேகம் அடைந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கை வந்த பிறகே இது கொலையா என்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ttn

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளேரிப்பட்டி கிராமத்தில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த குழந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.