பெண் குரலில் ஆபாச பேச்சு…ஆண்களை குறிவைத்து கார், வீடு என சொகுசு வாழ்க்கை: போலீசில் வசமாக சிக்கிய இளைஞர்!

 

பெண் குரலில் ஆபாச பேச்சு…ஆண்களை குறிவைத்து கார், வீடு என சொகுசு வாழ்க்கை: போலீசில் வசமாக சிக்கிய இளைஞர்!

செல்போனில் ஆபாசமாக பேச 100 ரூபாய்  கட்டணம், வீடியோ கால்  பேச 100 ரூபாய்  கட்டணம் என்று கூறியுள்ளார். இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் உதயராஜ் என்பவருக்கு பிரியா என்ற பெண் இணையதளம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இவர் உதயராஜை தொடர்பு கொண்டு செல்போனில் ஆபாசமாக பேச 100 ரூபாய்  கட்டணம், வீடியோ கால்  பேச 100 ரூபாய்  கட்டணம் என்று கூறியுள்ளார். இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து உதயராஜை மிரட்டி பிரியா பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து உதயராஜ் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணையில் உதயராஜிடம் பேசியது நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது. இவர்  பெண் குரலில் பேசிய ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் பொறியியல் பட்டதாரி. சென்னையில்  தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது பெண் போல பேசுவதை இரு பெண்கள் மூலம் கற்றுக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை அனுப்பி  பணம் பறித்துள்ளார். அதன் மூலம் கார், வீடு என வாங்கி சொகுசு வாழ்க்கை  வாழ்ந்து வந்துள்ளார். 

ttn

இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார்,  மோசடி செய்து பணம் பறித்தல்,  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.