பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த தெலுங்கு நடிகர் பிருதிவிராஜ்… திருப்பதி பக்தி சேனலின் சேர்மன் பதவிலிருந்து நீக்கம்!

 

பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த தெலுங்கு  நடிகர் பிருதிவிராஜ்… திருப்பதி பக்தி சேனலின் சேர்மன் பதவிலிருந்து நீக்கம்!

ஆடியோ ஒன்றையும் புகாரின் இணைத்து கொடுத்துள்ளார்.  இந்த ஆடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள  திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான பக்தி சேனலலானது தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு தெலுங்கு காமெடி  நடிகர் பிருதிவிராஜ்  சேர்மனாக உள்ளார். இவர் மீது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் திருப்பதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி அலுவலகத்திற்குச் சென்று பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகர் பிருதிவிராஜ் இரவு நேரங்களில் செல்போனில் அழைப்பது, அலுவலகத்தில் பாலியல் தொல்லை கொடுப்பதோடு, உறவுக்கு அழைக்கும் விதமாக பேசியுள்ள ஆடியோ ஒன்றையும் புகாரின் இணைத்து கொடுத்துள்ளார்.  இந்த ஆடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானது. 

ttn

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த  ஏஐடியூசி மாநில செயலாளர் முரளி, காமெடி  நடிகர் பிருதிவிராஜ் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது. ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பிருத்வியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ttn

இதுகுறித்து பேசிய  காமெடி  நடிகர் பிருதிவிராஜ், என புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் இப்படி அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து காமெடி  நடிகர் பிருதிவிராஜை பதவி விலகக்கோரி முதல்வர் ஜெகன் மோகன்  ரெட்டி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.