பெண் உரிமையாளரின் கழுத்தறுத்து கொலை செய்த ஊழியர்கள்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

 

பெண் உரிமையாளரின் கழுத்தறுத்து கொலை செய்த ஊழியர்கள்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

உணவக உரிமையாளரின் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் தப்பியோடிய உணவக ஊழியர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை: உணவக உரிமையாளரின் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் தப்பியோடிய உணவக ஊழியர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனங்காப்புத்தூர் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் தேவதாஸ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவரின் உணவகத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இளையராஜா மற்றும் சீனிவாசன் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களது வேலையில் திருப்தி ஏற்படாததால் தேவதாஸ் இவர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சம்பள பாக்கியை பெற்றுச் செல்ல வந்த இவர்கள் கடையில் பணத்தை பெற்றுக் கொண்டு அருகில் உள்ள சேகர் ரெட்டி அவென்யூவில் உள்ள தேவதாஸின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தனியாக விஜய லட்சுமி இருப்பதை அறிந்த அவர்கள்  அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து  தகவலறிந்த பரங்கிமலை உதவி ஆணையர் முத்துசாமி தலைமையிலான காவல்துறையினர் விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பம்மல் சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.