பெண்ணை கடத்தி சித்ரவதை! தீக்காயங்களுடன் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் !

 

பெண்ணை கடத்தி சித்ரவதை! தீக்காயங்களுடன் திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் !

தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் சேர்ந்த சக்திவேல், வசந்தா தம்பதி வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 4 மகள்களும், தாய் வீட்டிலும், தந்தை வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தனர். திருப்பூரில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய சக்திவேலின் ஒரு மகள் கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மநபர்கள் சிலர் இளம் பெண்ணை கடத்தி சென்று கொடூரமாக சித்ரவதை செய்து அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் சேர்ந்த சக்திவேல், வசந்தா தம்பதி வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 4 மகள்களும், தாய் வீட்டிலும், தந்தை வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தனர். திருப்பூரில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய சக்திவேலின் ஒரு மகள் கலைச்செல்வியை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 2 நாட்களுக்கு பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் வீட்டின் முன்பு விட்டுச் சென்றுள்ளனர். அவரை மீட்ட பொதுமக்கள் காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கலைச்செல்வியின் தலை முடி அறுக்கப்பட்டிருந்தது. கையில் சூடு போட்ட காயங்களுடன் இருந்த கலைச்செல்வி, தன்னை மர்ம நபர்கள் சிலர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறினார்.
இதுகுறித்து குலசேகரம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? அந்த நபர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.