பெண்ணின் வயிற்று வலிக்கு ஆணுறையை பரிந்துரை மருத்துவர்: அதிர வைக்கும் சம்பவம்!

 

பெண்ணின் வயிற்று வலிக்கு ஆணுறையை பரிந்துரை மருத்துவர்: அதிர வைக்கும் சம்பவம்!

மருத்துவர்  அஸ்ரஃப் அப்படி எழுதியது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீக்க மாநில சுகாதார அமைச்சகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. 

ஜார்க்கண்ட் : வயிற்று வலிக்காகச் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் மருந்து சீட்டில் ஆணுறையை எழுதிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காட்சிலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அதில்  மருத்துவராக பணியாற்றி வந்தவர் அஸ்ரஃப். இவரிடம் கடந்த ஜூலை மாதம் 55 வயது பெண் ஒருவர் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெற வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அஸ்ரஃப் மருந்து சீட்டில் நிரோத் என்று எழுதி, மருந்துக்கடையில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளார். அந்த சீட்டை அப்பெண் மருந்துக்கடையில் கொடுத்தபோது தான், மருத்துவர் சீட்டில் எழுதி இருந்தது காண்டம் என்பது அந்த பெண்ணுக்கு  தெரிந்தது. 

condom

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம், அம்மாநில சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. இதுகுறித்து விசாரிக்க, 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் மருத்துவர்  அஸ்ரஃப் அப்படி எழுதியது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீக்க மாநில சுகாதார அமைச்சகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. 

doctor

முன்னதாக மருத்துவர் அஷ்ரப் மீது செவிலியர்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அவமானப்படுத்தியதாகவும் ஏற்கனவே அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.