பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த கைப்பிடியை சொருகி கொடுமை செய்த கணவர்: பதைபதைக்க வைக்கும் சம்பவம்!?
பெண்ணின் கருப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த பிளாஸ்டிக் துண்டு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம்: பெண்ணின் கருப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த பிளாஸ்டிக் துண்டு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு 6 குழந்தைகள் இருந்துள்ளன. அவரது கணவன் குடிபோதையில் தினசரி அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பெண்ணைத் தாக்கிய அவரது கணவர், உச்சக்கட்ட கொடூரமாக அவரது பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியைச் சொருகி கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களாக வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்த அந்த பெண் மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்போது அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரை செலவாகும் என்பதால் வீடு திரும்பிய அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பெண்ணை புகாரை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர் அவரது கணவரை கைது செய்ததுடன், பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் அவரது கருப்பையிலிருந்து 6 இஞ்ச் அளவிலான பைக்கின் கைப்பிடி பிளாஸ்டிக் துண்டை அகற்றினர். இதையடுத்து அப்பெண் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த கோரச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.