பெண்ணாக மாறிய அக்க்ஷய் குமார்: மிரட்டலாக வெளியானது காஞ்சனா ஃபர்ஸ்ட் லுக்

 

பெண்ணாக மாறிய அக்க்ஷய் குமார்: மிரட்டலாக வெளியானது காஞ்சனா ஃபர்ஸ்ட் லுக்

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த திரைப்படம் காஞ்சனா. அதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக நடிகை ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரில்லர் பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் 3-வது பாகமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து லாரன்ஸ் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். 

kanchana 3

ஆம்.. 8 வருடங்களுக்கு பிறகு காஞ்சனா படத்தை ஹிந்தியில் லக்‌ஷ்மி பாம் என்று பெயரில் இயக்கி வருகிறார். தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்  மேலும் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடத்தில் அக்க்ஷய் குமார் பேயை நம்பாதவராகவும், பேயை கண்டு பயம் கொள்ளாதவராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (இன்று) வெளியாகியுள்ளது. அதில் கண்ணுக்கு கீழே காஜல் இடுவதால் போல் வித்தியாசமாக தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.