பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பலே திருடன்! கையும் களவுமாக பிடிபட்ட பரிதாபம்!! 

 

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பலே திருடன்! கையும் களவுமாக பிடிபட்ட பரிதாபம்!! 

பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை திருடிய வாலிபரை அந்த விடுதியிலிருந்த பெண்கள் பிடித்து போலீசில் ஒப்படத்தனர்.

பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை திருடிய வாலிபரை அந்த விடுதியிலிருந்த பெண்கள் பிடித்து போலீசில் ஒப்படத்தனர்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை அருகே நாராயணசாமி தோட்டத்தில் நர்சிங் வேலை பார்த்து வருபவர்களுக்கென தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். உடனே சத்தம் கேட்டு விடுதிக்குள் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்துள்ளானர். 

அவரை அடித்து உதைத்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விடுதி நிர்வாகத்தினர் போலீசில் பிடிபட்ட நபர் ரூ. 80 ஆயிரம் திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் மந்தைவெளியைச் சேர்ந்த சரத் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் விடுதிக்குள் அத்துமீறி நுழையும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.