பெண்கள் பற்றி விஷ்வ இந்து பரிசத் செயலாளர் சர்ச்சை பேச்சு

 

பெண்கள் பற்றி விஷ்வ இந்து பரிசத் செயலாளர் சர்ச்சை பேச்சு

மங்களூர்: பப்களில் குடித்து, நடனமாடும் பெண்களை இளைஞர்கள் தாக்குவது நல்ல செயல் என விஷ்வ இந்து பரிசத்தின் செயலாளர் ஷரண் பம்ப்வெல் தெரிவித்துள்ளார்.

மங்களூரில் The quint பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “பப்களுக்கு சென்று குடித்து, நடனமாடும் பெண்களை இளைஞர்கள் தாக்குவது நல்ல செயல், அதில் தவறேதுமில்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “ஒரு இளம்பெண் பப் செல்கிறார், குடிக்கிறார், நடனமாடுகிறார். அதுபோன்ற இடங்களில் பாலியல் தொழில் செய்யும் கும்பல்கள் இருக்கக்கூடும், இவர்களின் செயலை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தால் எங்கள் கலாச்சாரம் சீரழிந்துவிடும். மங்களூர் கலாச்சாரம் மிக்க இடம், அதனால் தான் இளைஞர்கள் இதற்கு முடிவுகட்ட பெண்களை தாக்குகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக ஜெயிக்க வேண்டும், இந்துக்களின் வெற்றிக்காக நாங்களும், பச்ரங் தளமும் இணைந்து தேர்தல் பணி செய்வோம் என கூறியிருக்கிறார்.

 

#vhp  #sharan  #pumpwell  #mangalore  #bjp