பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு; ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம்!

 

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு; ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்தனர்

மும்பை: பெண்கள் மற்றும் பாலியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இவர்களின் இந்த கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

hardik pandya, kl rahul

இதையடுத்து, ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருவருக்கும் இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிசிசிஐ-யின் நிர்வாகிகளின் குழு ரத்து செய்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழு, இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. எனவே, விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என பிசிசிஐ தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

hardik pandya, kl rahul

இந்நிலையில், இந்த் விவகாரம் குறித்து விசாரித்த பிசிசிஐ நிர்வாகிகள் குழு, ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விதித்துள்ளது. அதன்படி, பணியின் போது உயிரிழந்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்திற்கு இருவரும் தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்திற்கு இருவரும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், போட்டிக் கட்டணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

நான் முன்னாலே போறேன்…நீ பின்னாலே வாடி; இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகம்!