‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்றிடுக!’ – கனிமொழி முழக்கம்

 

‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்றிடுக!’ – கனிமொழி முழக்கம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்ற மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. 

அப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், “பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா கடந்த 9 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் முடிவுக்கு கட்டுப்பட்டே இருக்கும் நிலை நீடிக்கிறது.

womens

சட்டம் இயற்றப்படும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் கூட பெண்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

சபரிமலை உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு திமுக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.