‘பெண்களை ஏமாற்றிய காசி தரப்பில் ஆஜராக மாட்டோம்’..கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

 

‘பெண்களை ஏமாற்றிய காசி தரப்பில் ஆஜராக மாட்டோம்’..கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

இதையே தொழிலாக செய்து வந்த காசியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் காசி(26) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து விட்டு, மீண்டும் நாகர்கோவிலுக்கே வந்துள்ளார். அப்பாவின் கறிக்கடையை பார்த்துக் கொண்டு வரும் அவர், எப்போது பார்த்தாலும் சோஷியல் மீடியாக்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருப்பாராம். அதாவது கட்டுடல் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பெண்களுக்கு மாய வலையை விரித்துள்ளார் காசி. அதில் சிக்கும் பெண்களிடம் பேசி, பழகி ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் காசு கேட்டு மிரட்டி, பணம்  பறித்துள்ளார். 

ttn

இதையே தொழிலாக செய்து வந்த காசியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக பொருளாதார வசதி இருக்கும் பெண்களையே குறி வைத்து காசி, வலை விரித்த இவர் மீது கன்னியாகுமரி எஸ்.பியிடம் ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டதின் பேரில், காசியை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். 

ttn

இந்நிலையில் காசியின் தரப்பில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என   நாகர்கோயில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். காசி வழக்கில் ஆஜராகக் கூடாது என்று வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். பெண்களை ஏமாற்றிய காசி தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.