பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்வேன்… பிக்பாஸில் சரவணனால் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை!!
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், காயத்ரி ரகுராம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து முடிந்தது. அதே போல், மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இந்தவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார். இதற்கு கமல்ஹாசன் எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்காத நிலையில், பார்வையாளர்களும் சரவணனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
Check this pic.twitter.com/qYDH7KORlN
— Sindhu (@sindhu0) July 27, 2019
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாடகி சின்மயியும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் என்பது நகைச்சுவையானதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.