பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞருக்கு அடி, உதை; செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள்!

 

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞருக்கு அடி, உதை; செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள்!

பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு அருகே சென்று அவர்களை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார்

திருவண்ணாமலை: பேருந்து நிலையத்தில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞரை அங்கிருந்த மக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு அருகே சென்று அவர்களை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார்.

abuse

இதனை கண்ட அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என ஓர் அறை விட, அங்கிருந்த மற்றவர்களும் சேர்ந்து கொண்டு அவரை அடித்து உதைத்துள்ளனர்.

தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் காவல் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த இளைஞரை பொதுமக்களின் தர்ம அடியில் இருந்து காப்பாற்றியதுடன், அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றார்.

arrest

காவல்நிலையத்தில் வைத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பெயர் கலைமணி என்பதும் சென்னையிலுள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது செல்போனை ஆராய்ந்ததில், அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படம் இருந்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க

பாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி: உறைய வைக்கும் சம்பவம்!