பெண்களுக்கு ஓர் பிரச்னை என்றால் நான் வருவேன் – சிம்பு அதிரடி!

 

பெண்களுக்கு ஓர் பிரச்னை என்றால் நான் வருவேன் – சிம்பு அதிரடி!

தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார். நடிகர் சிம்புவின் காதல் வாழ்க்கை பற்றி  நாம் அனைவரும் அறிவோம். அவர் கோலிவுட்டின்  கதாநாயகிகள் நயன்தாரா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் உறவு கொண்டிருந்தார். அவர்  தனது முன்னாள் தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்டன. இதனால் சிம்பு மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

simbu

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிரபல கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய சிம்பு,  “நான் பெண்களை திட்டி பாடுகிறேன் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் அந்த பெண்கள் தானே எனக்கு உறுதுணையாக துணை நிற்கிறார்கள். எனக்கு பெண்களை பிடிக்கும், நான் பெண்கள் மீது மிக பெரிய அன்பை வைத்திருக்கிறேன். அதனால் பெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் கண்டிப்பாக முதல் ஆளாக வந்து நிப்பேன்” எனக்கூறினார். அவரது பேச்சுக்கு அங்கு கூடியிருந்த மாணவர்கள் ஆரவாரமாக கரவொலி எழுப்பினர்.