பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட மக்கள்!

 

பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட மக்கள்!

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள டென்யூ மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியிலிருந்த பெட்ரோல் முழுவதும் சாலையில் கொட்டியது. இதைப்பார்த்த அப்பகுதியிலிருந்த மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க குவிந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.