பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!

 

பெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி!

எத்தனை காலம்தான் எண்ணைக்காக இவ்வளவு செலவு செய்வது,இப்புடியே போனா இதற்கு முடிவு கிடையாதா என வெம்பிய மத்திய அரசு, வாகனங்களை மின்மயமாக்குவது குறித்து சிந்திக்க துவங்கியிருக்கிறது. நிதி ஆயோக் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு முதல், மின்சாரத்தால் மட்டும் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ஆம் ஆண்டு முதல் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தது.

அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை கூடிக்கொண்டே போகிறது. வருடத்திற்கு 125 பில்லியன் அதாவது எட்டே முக்கால் லட்சம் கோடி ரூபாய் எண்ணைக்காக போய்க்கொண்டிருக்கிறது. எத்தனை காலம்தான் எண்ணைக்காக இவ்வளவு செலவு செய்வது,இப்புடியே போனா இதற்கு முடிவு கிடையாதா என வெம்பிய மத்திய அரசு, வாகனங்களை மின்மயமாக்குவது குறித்து சிந்திக்க துவங்கியிருக்கிறது. நிதி ஆயோக் ஆலோசனைப்படி, 2023ஆம் ஆண்டு முதல், மின்சாரத்தால் மட்டும் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ஆம் ஆண்டு முதல் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தது.

Electric 3 wheelers

தற்போது ஒருபடி மேலேபோய், 2030 ஆண்டு முதல் நான்கு சக்கர‌ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்ற அளவுக்கு ஆலோசனைகள் தூள் பறக்கின்றன. மேலும், மின்சாரத்தால் இயங்குகிற கனரக வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க, பிரத்யேகமான மின்நெடுஞ்சாலைகள் அமைக்கவும் திட்டம் உள்ளதாம். நாயை கூப்பிடுற நேரத்துக்கு நாமளே வாரிடலாம்னு ஊர்ப்பக்கம் சொல்றமாதிரி, வெளிநாடுகளுக்கு லட்சகணக்கான கோடி ரூபாய்களை அள்ளி கொடுப்பதற்குப் பதிலாக நமது உள் கட்டமைப்பை மேம்படுத்துவதுதான் ஒரேவழி.