பெட்டிக்குள் சடலமாக கிடந்த பிரபல மாடல் அழகி! – மி டூ விவகாரத்தின் எதிரொலி?

 

பெட்டிக்குள் சடலமாக கிடந்த பிரபல மாடல் அழகி! – மி டூ விவகாரத்தின் எதிரொலி?

ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி மான்சி தீக்சித் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி மான்சி தீக்சித் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மான்சி தீக்சித்(20), மும்பை மாநகரில் பிரபல மாடலாக வலம் வந்தவர். இவருக்கும் 19 வயதான கல்லூரி மாணவர் சையத் ஹாசனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். தன் பணி காரணமாக மும்பையில் மான்சி தங்கியிருந்த வீட்டிலேயே இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், மும்பை நகருக்கு வெளியே மர்மமான முறையில் பெட்டி ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், அது மான்சி தீக்சீத்தின் உடல் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் தன் காரில் பயணித்ததாக ஓலா கார் ஓட்டுநர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர் சையத் ஹாசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரபலங்கள் இந்த கொலைக்கு பின் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.