பெசன்ட் நகர் கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு !
Dec 14, 2019, 13:05 IST1576308926000
சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள், கலையரங்கத்தைச் சீரமைப்பதற்காக மத்திய கலாச்சார துறையிடம் 7 கோடி ரூபாய் நிதியை வாங்கியுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள், கலையரங்கத்தைச் சீரமைப்பதற்காக மத்திய கலாச்சார துறையிடம் 7 கோடி ரூபாய் நிதியை வாங்கியுள்ளனர். ஆனால், கலையரங்கத்தைச் சீரமைக்காமல் அந்த பணத்தை மோசடி செய்து விட்டதாக மத்திய கலாச்சார துறை புகார் அளித்துள்ளது. இதனையடுத்து, கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மூர்த்தி, ராமச்சந்திரன், சீனிவாசன்,ரவி நீலகண்டன் மற்றும் முன்னால் இயக்குநர் லீலாசாம்சன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.