பெங்களூரு ரயிலில் AC “கோச்” குள்ளேயே புகுந்த  திருடர்கள் – பணத்துக்காக தாக்கப்பட்ட பெண் படுகாயம் :

 

பெங்களூரு ரயிலில் AC “கோச்” குள்ளேயே புகுந்த  திருடர்கள் – பணத்துக்காக தாக்கப்பட்ட பெண் படுகாயம் :

சென்னையை சேர்ந்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் 47 வயது எவ்வி சொக்கலிங்கம் ,இவர் நேற்று பெங்களூரில் உள்ள தனது நண்பரை  பார்த்துவிட்டு காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார் ,ரயில் அதிகாலை 3.30 மணி  அளவில்  கே.ஆர் .புரம் அருகே வந்த போது அவர்  சில திருடர்களால் தாக்கப்பட்டு அவரின்  கை பையை பறித்து சென்ற சம்பவத்தால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 

சென்னையை சேர்ந்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் 47 வயது எவ்வி சொக்கலிங்கம் ,இவர் நேற்று பெங்களூரில் உள்ள தனது நண்பரை  பார்த்துவிட்டு காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார் ,ரயில் அதிகாலை 3.30 மணி  அளவில்  கே.ஆர் .புரம் அருகே வந்த போது அவர்  சில திருடர்களால் தாக்கப்பட்டு அவரின்  கை பையை பறித்து சென்ற சம்பவத்தால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 

train

இந்த சம்பவம் பற்றி IIT பேராசிரியரான அவரின் கணவர் கூறும்போது ,”எனது மனைவி AC  கோச்சில் 11 ம் எண் பெர்த்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார் ,அதிகாலை 3.30 மணி அளவில் சந்தேகப்படும்படியான சில நபர்கள் அவர் அருகே வந்து அவரை தாக்கிவிட்டு அவரின் கைப்பையை பறித்து சென்றனர் ,என்  மனைவி அப்போது  கீழே விழுந்து மயக்கமானார் ,அப்போது ரயில்வே போலிஸ் அவரை மீட்டு ராமையா ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ,அவரது பையில் 14000 ரூபாய் .

robbery

மற்றும் வங்கி அட்டைகள் ,பல ஆவணங்கள் இருந்தன , ரயில் வேகமாக சென்றிருந்தால் என் மனைவியை காப்பாற்றியிருக்க முடியாது  “என்றார் ,இது பற்றி வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர் .