பெங்களூரில் 8 மாதக் கர்ப்பிணி வெட்டிக்கொலை !

 

பெங்களூரில் 8 மாதக் கர்ப்பிணி வெட்டிக்கொலை !

கடந்த வாரம், திபுராஹள்ளியில், 28 வயதான, எட்டு மாத கர்ப்பிணிப் பெண், பட்டப் பகலில் அவரது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் ஆதாரங்களை அழிக்கவும் முயன்றார், குற்றம் நடந்த இடத்தை சுத்தம் செய்து, சுவர்கள் மற்றும் தளங்களில் இரத்தக் கறைகளைத் துடைத்துள்ளார்.

பெங்களூரில் 8 மாத கர்ப்பிணி ஒரு கணவரின் சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த வாரம், திபுராஹள்ளியில், 28 வயதான, எட்டு மாத கர்ப்பிணிப் பெண், பட்டப் பகலில் அவரது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர் ஆதாரங்களை அழிக்கவும் முயன்றார், குற்றம் நடந்த இடத்தை சுத்தம் செய்து, சுவர்கள் மற்றும் தளங்களில் இரத்தக் கறைகளைத் துடைத்துள்ளார்.
பலியானவர் பெயர் ஜோதி. அவரது கணவர் ரயில்வேயில் பணிபுரிகிறார். இந்த கொலை குடும்பத்தினருக்கு தெரிந்த ஒருவரின் செயலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். போலீசார் சந்தேகம் அடைந்தது போலவே, அந்தப் பெண் தனது சொந்த மைத்துனர் ஹரீஷ் பாபுவால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. 

crime-scene-7.jpg

ஹரீஷ் பாபுவுக்கும் அவரது அண்ணியான ஜோதிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜோதியிடமிருந்து விலகி இருக்குமாறு மைத்துனருக்கு அறிவுறுத்தியிருந்தனர் குடும்பத்தினர். ஆனாலும் சண்டை தொடர்ந்தால் சுரேஷ் பாபுவின் மனைவி, மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் பாபு அண்ணியை மேலும் தொந்தரவு செய்யத் தொடங்கினார். 
இந்நிலையில் கடந்த வாரம் ஜோதி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சுரேஷ் பாபு அவருடன் சண்டையிட்டார். சண்டை அதிகரித்தது. இதையடுத்து ஜோதியை கத்தியால் வெட்டி கொலை செய்தார் சுரேஷ் பாபு. மேலும் ஆதாரங்களையும் மறைக்க முயன்றுள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.