பெஃப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நிதியுதவி!

 

பெஃப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நிதியுதவி!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவிய 4 முதல் 5 வாரத்தில் பன்மடங்காக பரவும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அபாய கட்டத்தில் தற்போது இந்தியா இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவே முடங்கியுள்ளது. அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 25 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட பெஃப்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடிகர்களும், இயக்குனர்களும், நடிகைகளும் நிதி உதவி அளித்து வருகின்றனர். 

ttn

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்ச்மும், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும், சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சமும், கமல்ஹாசன் ரூ.10 லட்சமும் நிதிஉதவி அளித்துள்ளனர். அதே போல, இயக்குனர் பி.வாசு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.