பூவிருந்தவல்லியில் கொரோனா பீதி… 500 பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு!

 

பூவிருந்தவல்லியில் கொரோனா பீதி… 500 பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் கொரோனா பீதி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூவிருந்தவல்லியில் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் வசித்து வருகின்றனர். மேலும் கர்நாடக பஸ் எல்லாம் பூவிருந்தவல்லி வழியாகவே சென்னைக்குள் நுழைகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து வரும் பஸ்கள் எல்லாம் பூவிருந்த வழியாக செல்லும் நிலையில் அங்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையம் முழுக்க கொரோனா ஒழிப்புக்காக கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

poonamallee-govt-hospital-09

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் கொரோனா பீதி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூவிருந்தவல்லியில் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் வசித்து வருகின்றனர். மேலும் கர்நாடக பஸ் எல்லாம் பூவிருந்தவல்லி வழியாகவே சென்னைக்குள் நுழைகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

poonamallee-govt-hospital

இதற்காக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.