பூம்புகாரின் சிறப்பு கைவினைப் பொருட்காட்சி! ரூ50 முதல் ரூ.4.25 லட்சம் வரை!

 

பூம்புகாரின் சிறப்பு கைவினைப் பொருட்காட்சி! ரூ50 முதல் ரூ.4.25 லட்சம் வரை!

தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களது வீடுகளில் கொலு படிகளை வைத்து நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், நலித்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில், கைவினை கலைஞர்களுக்கு..

தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களது வீடுகளில் கொலு படிகளை வைத்து நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், நலித்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில், கைவினை கலைஞர்களுக்கு.. அவர்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக சந்தைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தோடும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு நேரிடையாக கைவினை கலைஞர்களிடத்திலேயே, அவர்களது தயாரிப்புகளை வாங்கும் வாய்ப்பையும் வழங்கும் விதமாக பூம்புகார் நிறுவனம் கும்பகோணத்தில், சிறப்பு கைவினைப் பொருட்களின் கண்காட்சியை துவங்கியுள்ளது. 

exbition

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் இந்த சிறப்பு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளை கைவினைக் கலைகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.   இன்று தொடங்கி மொத்தம் 136 நாட்கள் வரையில் நடைபெறயுள்ள இக்கண்காட்சியினை வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தொடங்கி வைத்தார்.

exbition

கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பஞ்சலோக சிலைகள், கற்சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள், பாரம்பரியமான குத்துவிளக்குகள் மற்றும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகைகள், வேலைப்பாடுகள் உள்ள பட்டுப் புடவைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வாழைநார் கைவினைப் பொருட்கள் என குவிக்கப்பட்டுள்ளன. ரூ50 முதல் 4.25 லட்சம் வரையிலான விலையில் உள்ள கைவினை பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.