‘பூமிக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் குழந்தை சுர்ஜித் நலமுடன் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

 

‘பூமிக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் குழந்தை சுர்ஜித் நலமுடன் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.  அரசும் தொடர்ந்து  முயற்சி செய்து வருகிறது.

திருச்சி: பூமிக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் குழந்தை சுர்ஜித் நலமுடன் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

rajini

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க கடந்த 61 மணிநேரமாக மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.  தற்போது ஆழ்துளை கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதன் மூலம் குழந்தையை மீட்டு  விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் ஒட்டுமொத்த தமிழகமே சுர்ஜித் மீண்டு வரும் நொடியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. 

rajini

இந்நிலையில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘ பூமிக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் குழந்தை சுர்ஜித் நலமுடன் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.  அரசும் தொடர்ந்து  முயற்சி செய்து வருகிறது. மீட்பு பணிகளும் விடா  முயற்சியாக நடைபெற்று வருகிறது. அவர்களைக் குற்றம் கூற முடியாது. லதா ரஜினிகாந்த் குழந்தைகள் பாதுகாப்பிற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அது விரைவில் நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.