பூஜையுடன் துவங்கியது சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ – புகைப்படங்கள் உள்ளே!..

 

பூஜையுடன் துவங்கியது சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ – புகைப்படங்கள் உள்ளே!..

1991- ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்துக்கு பிறகு சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இது ரஜினியின் 167 -ஆவது (தலைவர் 167) படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார்

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தின் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் முதன்முறையாக ரஜினியுடன் பணிபுரிகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ரஜினி

1991- ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்துக்கு பிறகு சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இரட்டை வேடம் என்றும் கூறப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் இடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தர்பார்

‘தர்பார்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் பூஜையுடன் துவங்கியது. இதில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை, அவருடைய போர்ஷன் துவங்கும்போது படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் வேறு ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

இதையும் வாசிக்க: சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? தல தோனியின் நெகிழ்ச்சியான பதில்!