பூசணிக்காயில் இத்தனை சத்துக்களா? நீரிழிவு நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் பூசணிக்காய்!

 

பூசணிக்காயில் இத்தனை சத்துக்களா? நீரிழிவு நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் பூசணிக்காய்!

மாதந்தோறும் அமாவாசையன்று ரோட்டில் குங்குமம் பூசப்பட்டு உடைக்கப்பட்டிருக்கும் பூசணிக்காயைப் பார்த்தால் அதன் மகத்துவம் தெரிந்தவர்கள் மனதுக்குள் வெம்பி போவார்கள். பூசணிக்காயில் அத்தனை சத்துக்கள் இருக்கின்றன. திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பவர்கள் கூட, சமையலில் பூசணிக்காயைப் பார்த்தால் முகத்தை சுளித்துக் கொள்கிறார்கள்.

மாதந்தோறும் அமாவாசையன்று ரோட்டில் குங்குமம் பூசப்பட்டு உடைக்கப்பட்டிருக்கும் பூசணிக்காயைப் பார்த்தால் அதன் மகத்துவம் தெரிந்தவர்கள் மனதுக்குள் வெம்பி போவார்கள். பூசணிக்காயில் அத்தனை சத்துக்கள் இருக்கின்றன. திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பவர்கள் கூட, சமையலில் பூசணிக்காயைப் பார்த்தால் முகத்தை சுளித்துக் கொள்கிறார்கள்.
பூசணிக்காய் வெறும் திருஷ்டி சுற்றி உடைப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட காய் கிடையாது. நமக்குள்ளேயும், வெளியேயும் உள்ள கெட்ட சக்திகளை, நெகட்டிவ் எனர்ஜிகளை வெளியேற்றும், துரத்தியடிக்கும் சக்தி பூசணிக்காய், எலுமிச்சை போன்ற காய்களுக்கு உண்டு. அதனால் தான் இவைகளை திருஷ்டி கழிக்கப் பயன்படுத்துகிறோம். 

pumpkin

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்கிற பெயர்களும் உண்டு. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

pumpkin

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தினசரி உட்கொண்டால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும். பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.